வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறலுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை பெற்று வரும் துரைக்கண்ணுவின் உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. 

இந்நிலையில், துரைக்கண்ணு முழு நலம் பெற வேண்டும் என விரும்புவதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் 'Covid19-ஆல் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது அறிந்து அதிர்ச்சி அடைகிறேன். அமைச்சர் அவர்கள் முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன்!' என்றுத் தெரிவித்துள்ளார்.