பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் மோதியதில் தீக்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வேன் ஓட்டுநர், பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வெற்றிவேலின் மகன் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளி வேனிலேயே சென்று வருவது வழக்கம். அதே போல இன்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி வளாகத்திலேயே வேன் மோதியதில் உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, விபத்து நடந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி வளாகத்தில் மாணவர் இறக்கிவிடப்பட்டுள்ளார். இறங்கிச் சென்ற மாணவன் மீண்டும் வேனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வேன் பின்னோக்கி வந்துகொண்டிருந்ததால், மாணவன் மீது மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவனை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மாணவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு விசரணையில்  பள்ளி தாளாளர் ஜெயா சுபாஷ் முதல்வர் தனலட்சுமி, வாகன பாதுகாவலர் ஞானசக்தி மீது வழக்குப்பதிவு செய்து  மேலும் இந்த விபத்து தொடர்பாக வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்கவேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது எல்லாம் விசாரணை முடிவில் தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவன் பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் பள்ளி வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக  விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் ஒரு காரணம் என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்ட நிலையில் கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அதனைத்தொடர்ந்து பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தி சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கை கூறுவதாவது: பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளர் இடம் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்திலிருந்து அழைத்து வரும் போது பேருந்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் இறங்கி விட்டார்களா? என்று உறுதி செய்த பிறகே வானகத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்த வேண்டும். 

மேலும் மாணவர்களை அழைத்து வரும் பள்ளிப் பேருந்துகள் ஆட்டோ ரிக்ஷாக்கள் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டுள்ளது  பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும். வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மாணவர்களை ஏற்றி இறக்குவதற்கு ஓட்டுநர் உடன் ஒருவர் உதவியாளரையும் வைத்திருக்கவேண்டும். வாகனத்தை ஓட்டும் போது சினிமா பாடல்களை ஒளிபரப்பக் கூடாது.

மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லக்கூடாது. ஓட்டுநரின் குழந்தை குடும்ப புகைப்படம் ஒன்றை அவரது இருக்கைக்கு எதிரில் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். அவசர தேவைக்கு முக்கியமான தொலைபேசி எண்களை பேருந்தினுள் மற்றும் வெளியே பார்வையில் தெரியும் படி எழுதவேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.