நேற்று இரவு சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கடந்த 13 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. 

இந்த தாழ்வு பகுதியானது, “இன்று மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. 

இதன் காரணமாகவே, “தமிழகத்தில் இன்று சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக” சென்னை வானிலை ஆய்வு மையும் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாகவே, இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், இவற்றுடன் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்” என்றும், வானிலை மையும் கூறியுள்ளது.

அத்துடன், “தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையும் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, “நாளைய தினம் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல், மிக கனமழை பெய்யும் என்றும், இன்னும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வானிலை ஆய்வு மையத்தால் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் “ரெட் அலர்ட்” சென்னைக்கு விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், “செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும், அதே போல் டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக, “மத்திய மேற்கு, தென் மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்” என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.