சுகாதாரத்துறை செயலாலர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராதாகிருஷ்ணன் காயமின்றி உயிர் தப்பினார்.

radhakrishnan

கொரோனா முதல் அலை 2-வது கட்டுப்படுத்த பல்வேறு அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து கட்டுப்படுத்தினார். தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். புதிதாக உருவாகியுள்ள ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஒமிக்ரான் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஆய்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை குறித்து ஆய்வு செய்ய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி சென்றுக்கொண்டிருந்தார். 

அப்போது கார் புறப்பட்டு விமானநிலையம் பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது கார் எதிர்பாராத விதமாக அங்கிருந்து தடுப்பு சுவரில் இடித்து விபத்து ஏற்பட்டது. காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் கார் சுவரில் மோதி நின்றது. அதிர்ச்சியடைந்த போலீஸார், அவருடன் சென்ற மற்ற கார்களில் வந்தவர்கள் இறங்கி ஓடிச் சென்று பார்த்தனர்.  அதிர்ஷ்டவசமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு காயம் ஏற்படவில்லை. அவர் உடனடியாக காரை விட்டு இறங்கி ஓட்டுனருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா? என விசாரித்தார். காரை விபத்து ஏற்படுத்தியதற்கு ஓட்டுனர், மன்னித்துவிடுங்கள் என்று சுகாதாரத்துறை செயலரிடம் வருத்தம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  அவர் பராவாயில்லை கவலைப்படாதிங்க, உங்களுக்கு எதுவும் அடிப்படலல்ல என்று நலம் விசாரித்துவிட்டு. காவல்துறையினரை அழைத்து ஓட்டுனருக்கு உதவு சென்னதுடன், வேறு காரில் செல்கிறேன் பதட்டபடாமல் இருங்கள் என ஓட்டுனருக்கு ஆறுதல் கூறிச் சென்றார். இதனையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்று வாகனத்தில் திருச்சிக்கு கரோனா ஆய்வு பணிக்காக சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.