தமிழகத்தில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே.14 ஆம் தேதி முதல் அடுத்த ஜூன்.12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே.14 ஆம் தேதி முதல் அடுத்த ஜூன்.12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 8.37 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தற்போது பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில், பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயில் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மேலும் இது குறித்து பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தேர்வு நாளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும், முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இன்று, 1-ம் வகுப்பு முதல் 9 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 14 -ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1-ம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும், வரும் 14 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 13 ஆம் தேதி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று பனிரெண்டாம் வகுப்பிற்கு பொது தேர்வு தொடங்கியது அடுத்து இன்று பத்தாம் வகுப்பிற்கு பொது தேர்வு தொடங்கியது. மேலும் வருகிற ஜூன் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.