அலைபாயுதே காதலனுக்கு அல்வா கொடுத்த காதலி, வேறொருவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், ஆத்திரமடைந்த பழைய காதலன், அந்த பெண்ணின் கணவனை வெட்டிகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம் பெண்ணுக்கும், அவரது உறவினரான சோழபுரத்தை சேர்ந்த 21 வயதான ஆனந்தராஜ் என்ற இளைஞனுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் சூழல் காரணமாக, ஆனந்தராஜ் துபாய்க்கு வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால், அலைபாயுதே ஸ்டைலில் யாருக்கும் தெரியாமல் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுது்த, ஆனந்தராஜ் துபாய்க்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சென்று உள்ளார்.

இப்படியான சூழ்நிலையில், குமாரகிரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான சூரிய ராகவன் என்ற இளைஞன், எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே டிவி பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். 

அப்போது, பட்டதாரியான மகாலட்சுமி சூரிய ராகவன் கடையின் அருகே உள்ள டைப்பிஸ்ட் இன்ஸ்டிடியூட்டிற்கு வந்து சென்ற போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பின்னாளல் அது காதலாக மாறி உள்ளது. இனதால், அவர்கள் இருவரும் காதலித்து வந்து உள்ளனர்.

இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த நிலையில், இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், காதலர்கள் இருவரும் தங்களது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி மகாலட்சுமி - சூரிய ராகவனும் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டினர்.

இதனால், கடும் ஆத்திரம் அரடைந்த ஆனந்தராஜ், “என்னை “அலைபாயுதே” ஸ்டைலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டுவிட்டு, என்னை ஏமாற்றி நீ மற்றொருவரை 2 வதாக திருமணம் செய்துகொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாமலும், இதே நேரத்தில் தனது காதலியை மறுக்க முடியாமல் தவித்து வந்த” ஆனந்தராஜ், சூரிய ராகவனை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்.

அதன் படி, டிவி பழுது பார்க்கும் கடையில் இருந்த சூரிய ராகவனிடம் ஒரு டி.வி.யை கொடுத்து சரிபார்க்க கொடுத்திருக்கிறார் ஆனந்தராஜ். அப்போது, திடீரென்று தனது கட்டைப்பையில் இருந்து மிளகாய் பொடியை எடுத்து சூரிய ராகவன் முகத்தில் வீசவே, அவர் நிலை தடுமாறிய நிலையில், ஆடு வெட்டும் அரிவாளால் சூரிய ராகவனின் தலையை தனியாக துண்டித்து தூர வீசி விட்டு, அங்கிருந்து ஆனந்தராஜ் தப்பி ஓடியிருக்கிறார்.

அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிய வந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடுத்த 4 மணி நேரத்தில் கொலை செய்த ஆனந்தராஜை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த முக்கோண காதல் கதை விவகாரம் போலீசாருக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.