விரிவடையும் இந்தியாவின் சந்தை வாய்ப்பு! பின்னணி என்ன?

விரிவடையும் இந்தியாவின் சந்தை வாய்ப்பு! பின்னணி என்ன? - Daily news

சில வாரங்களுக்கு முன், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை தடை செய்திருந்தது. மேலும் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் சில செயலிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அரசு சார்பில் செயலிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டது குறித்து, பலரும் விமர்சனங்கள் வைத்திருந்தனர்.

இதன் அனைத்துக்கும் பின்னர், அந்த செயலிகளுக்குப் போட்டியாக இந்தியா சார்ப்ல் செயலிகள் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட செயலிகளைக் கொண்டு, உலகின் நம்பர் ஒன் மொபைல் போன் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்ற , மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். அதேபோல நாட்டில் தற்போது 200 புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதனால் இந்தியாவில் செயலிகளுக்கான சந்தையில் உள்நாட்டினுக்குச் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக டிக்டாக் போன்ற செயலிகளால் தங்களது சந்தை மதிப்பை இழந்திருந்த ரோபோசோ, ஷேர்சாட் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மூலம் மீண்டும் தங்களின் சந்தை மதிப்பையும் வாடிக்கையாளர்களையும் அதிகரிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதை  நம்ப முடியாத வகையில் பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ரோபோசோ நிறுவனம் அறிவித்திருந்தது.

இதுபற்றி நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர், ``இந்தியர்களின் தரவுகளை வெளிநாட்டினர் திருட அனுமதிக்க முடியாது என்றும், அரசு அதன் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது" என்று கூறியிருந்தார். நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் ஆராயப்பட்டு, தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் எலக்ட்ரானிக் உற்பத்தித் துறை பற்றிக் கூறிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர், ``2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு மொபைல் உற்பத்தி  யூனிட்டுகள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது என்றார். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி மையமாக மாறிவிட்டது. மேலும் இதன்மூலம் சீனா மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக முதலிடத்தில் உள்ளது.  அந்த நிலையை மாற்றி, இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்குவதே அரசின் நோக்கம்" எனக் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா இடையில் எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,  சீனாவுடன் வர்த்தகத்தைக் குறைக்கவேண்டும், சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தியாவில் வலுவடைந்து வந்தன.

அதைத் தொடர்ந்துதான், இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின், டிக்டாக்  ஹலோ, உட்பட 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு, கடந்த மாதம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் எல்லைப் பிரச்னைக்கும் இதற்கும் தொடர்பில்லை எனச் சொல்லியது அரசு. இப்போதோ, இந்தியாவில் உற்பத்தி மையம் பெருகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டுக்கும் தொடர்பு உண்டோ என்ற கோணத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது. 

 

- பெ.மதலை ஆரோன்

Leave a Comment