தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1-12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

schools

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளன. இந்த நிலையில், தொற்றின் நிலையை ஆய்வு செய்யவும், தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்கலாமா? என்பது பற்றியும் இன்று மருத்துவ நிபுணர்கள், குழுவுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

மேலும் முதற்கட்டமாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்ட நிலையில், தற்போது 1 முதல் 12 வரை பள்ளிகளை திறப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சிலமணி நேரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத்தொடர்ந்து கல்லூரிகளை பொறுத்தவரை பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருப்பதால், தேர்வுகள் முடிந்த பிறகு நேரடி வகுப்புகள் நடைபெறுவதற்கும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.