ரயிலில் பெண் டாக்டர் ஒருவர் பயணித்தபோது, அக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் திடீரென்று அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இருந்து கேரள மாநிலத்திற்கு, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போதுதான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலத்தை சேர்ந்த 43 வயதான சுமிதா என்ற பெண், சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். 

டாக்டர் சுமிதா, சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து கேரள மாநிலம் கண்ணனுாருக்கு சென்று உள்ளார்.

அதுவும், சென்னையில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக, அவர் தனது குடும்பத்துடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்து உள்ளார். 

ஆனால், அந்த ரயிலில் அந்த பெண் டாக்டரி மற்ற குடும்ப உறுப்பினர்கள் வேறு வேறு இடங்களின் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில், இந்த பெண் டாக்டரும் மற்றொரு இடத்தில் அமர்ந்து பயணித்து உள்ளார்.

அப்போது, இந்த பெண் டாக்டரின் அருகே ஒரு இளைஞர் அமர்ந்து பயணம் செய்து உள்ளார். 

அதன் படி, சென்னையில் இருந்து கேரள மாநிலம் நோக்கி புறப்பட்ட அந்த ரயிலானது, சேலம் - ஈரோடு இடையே சென்று கொண்டிருந்த போது, அந்த  43 வயதான அந்த பெண் டாக்டர் சுமிதாவிடம், அருகே அமர்ந்து பயணித்த அந்த இளைஞர் திடீரென்று அத்து மீறி அந்த பெண் டாக்டர் மீது கை வைத்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சுறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் டாக்டர் சுமிதா, அந்த இளைஞனை கடுமையாக திட்டி சத்தம் போட்டதுடன், தன் மீது இருந்த கையை எடுக்குமாறு எச்சரித்து உள்ளார்.

இதனையடுத்து. அந்த ரயில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடைந்த போது, அங்கு நின்றிருந்த ரயில்வே போலீசாரிடம் பெண் டாக்டர் சுமிதா புகார் அளித்து உள்ளார்.

அப்போது, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். 

அப்போது, பாலியல் சில்மிஷயத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர், 39 வயதான ரபிக்  என்பதும், இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் காலதிங்கள் பாரப்பை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து, ரபிக் மீது ஈரோடு  ரயில்வே போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பிறகு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணைக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.