விவசாயிகளின் நலத்திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா மூலம் கிடைத்த பிற லாபங்கள், 13 மாவட்டங்களில், விவசாயிகள் அல்லாதவர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டை தொடர்ந்து, வேளாண் முதன்மை செயலாளர் (Agriculture Secretary) கங்கந்தீப் சிங் பேடி விசாரணைக்கு உத்தரவிட்டு வியாழக்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ மாநாடு மூலம் ஒரு சந்திப்பை நடத்தினார்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜ்னா என்பது, விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள விவசாய நடவடிக்கைகளைத் தொடர உதவும் வகையில் 2018 இல் நிறுவப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் 6000 ரூபாய் நிதி மூன்று தவணைகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடலூரில் (Cuddalore) விவசாயிகளாக இல்லாத சிலர், இந்த திட்டத்தின் நலன்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட கலக்டரேட் மற்றும் சில இடைத்தரகர்கள். பயனாளிகளின் பட்டியலில் மற்றவர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கான கட்டணமாக 1,000 ரூபாய் வாங்கி இந்தச் செயலைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் வேளாண் மற்றும் வருவாய் துறைக்கு ஒரு தனி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதில் இந்த ஊழல் கடலூரில் மட்டுமல்லாமல், வடக்கு தமிழகத்தின் 12 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது.  அசல் பயனாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் திட்டத்தின் பயன்கள் போய் சேருவதை உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

விசாரணையின் முடிவில், ``1.79 லட்சம் பயனாளிகளில், 78,000 பேர் கோரோனா தொற்றுநோய் காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் - புதிதாக சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 38,000 பேர் விவசாயிகள் அல்லாதவர்கள்" என்பது தெரியவந்தது. 
இதில், கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளை சேர்க்க இணையதளத்தில் மத்திய அரசு முதலில் சில எளிய மாற்றங்களை ஏற்கெனவே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதனையே பயன்படுத்தி வேளாண் துறை அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை திருடி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை விவசாயிகள் அல்லாதவர்கள் சேர்ந்திருப்பதும் தற்போது கண்டறியாட்டுள்ளது. 

இதேபோன்ற நிலை மற்ற மாவட்டங்களிலும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஒரு சந்திப்பை நடத்திய ககந்தீப் சிங் பேடி, இந்த விஷயத்தில் நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வேளாண்துறை அதிகாரிகள் கண்காணிப்பு குழு, வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில், விவசாயிகளின் வங்கி கணக்கு வைத்துள்ள 226 வங்கி கிளைகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் தற்போது வரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பணியாற்றிய 10 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.