“மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்” என்று, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழிப்புணர்வோடு எச்சரிக்கை
வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் பரவத் தொடங்கிய கொரோனா 2 வது அலையானது, மே மற்றும் ஜூன் மாதங்களில் பதிய
உச்சமாக பரவிக்கொண்டு இருந்தது. 

இதனையடுத்து, கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தமிழகம் முழுவதும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை மெல்ல
திரும்பியது. 

இந்த நிலையில், தமிழகத்தின் சில இடங்களில் கடந்த 4 நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாக பதிவாகி வருவதாக தமிழக
சுகாதாரத்துறை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3 வது அலை பற்றிய அச்சம் பொது
மக்களிடையே எழுந்திருக்கிறது. 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய எச்சரிக்கையுடன் கூடிய வீடியோ
ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில் பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “கொரோனா என்னும் பெருந்தொற்று, கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நம் நாட்டு மக்களையும் வாட்டி
வதைத்துக்கொண்டிருக்கிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். கேரளா, கர்நாடகா போன்ற நமது பக்கத்து மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து
வருகிறது. மக்கள்தொகை நெரிசலாகவும், அதிகமாகவும் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், மக்களை காக்கிற
பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன் என்றும், அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டும் வருகிறோம்
என்றும்” என்றும், கூறியுள்ளார்.

“தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது என்றும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது லேசாக பரவத்தொடங்குகிறது
என்றுமு், இதை கவனத்தில் வைத்து பொது மக்கள் செயல்பட வேண்டும் என்று நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்” என்றும், மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

“கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலமாக தங்களுடைய தேவைகளை வாங்குவதற்காக மக்களுக்கு வழி ஏற்படுத்தி தருகிறோம் என்றம், ஆனால் அங்கு வரும் பொது மக்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்ற தவறிவிடுகிறார்கள் என்றும், முககவசம் அணியாமல் செல்லுதல், கூட்டமாக கூடுதல், நெரிசலாக நிற்பது,
இதை எல்லாம் பார்க்கும்போது மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது எனக்கு வேதனையைத்தான் தருகிறது” என்றும், மு.க.ஸ்டாலின் கவலைத் தெரிவித்து
உள்ளார்.

“அதனால் தான், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவு கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடும் நடவடிக்கை எடுக்கலாம் என்று மாவட்ட
ஆட்சியர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன் எ்னறும், சென்னையில் அப்படி பல பகுதிகள் மூடப்பட்டு உள்ளன என்றும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது
என்பதற்காக மட்டுமே, கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“அதை உணராமல், விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் நடந்துக்கொள்ளக்கூடாது” என்றும், மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

குறிப்பாக, “கூட்டமாக கூடுவதின் மூலமாக கொரோனா பரவலுக்கு பொது மக்களே காரணமாகிவிடக்கூடாது என்றும், மீண்டும் மீண்டும் உங்களை வலியுறுத்தி
கேட்டுக்கொள்கிறேன்” என்றும், ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

“மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்துவிடாதீர்கள் என்று கொஞ்சம் கடுமையாகவே சொல்லிக்கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் சற்று கடுமையாகவே பேசியிருக்கிறார்.

முக்கியமாக, “3 வது அலையை மட்டுமல்ல, எந்த அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வல்லமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்றும், அதற்கு தேவையான
உள்கட்டமைப்பு வசதிகளும் ஏராளமாக தயார் நிலையில் இருக்கிறது என்றும், இத்தகைய சூழலில் மக்கள் எவ்வளவு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை,
நான் சொல்ல தேவையில்லை” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே போல், “முதல், 2 வது அலைகளை விடவும் 3 வது அலை மோசமானதாக இருக்கும் என்றுமு், ஸ்பானிஷ் காய்ச்சலை போல இருக்கும் என்று டாக்டர்கள்
சொல்வதை பயமுறுத்தலாக இல்லாமல், நமக்கு தரப்படுகிற எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வோம்” என்றும், முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். 

“மிக, மிக அவசிய, அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என்றும், வெளியில் வைத்து முககவசத்தை கழற்றவோ, எடுக்கவோ
வேண்டாம்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழிப்புணர்வோடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.