மகளின் தோழியான சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, ஆட்டோ ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி, பெற்றோர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் துறையூரில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

ஆனால், அந்த சிறுமி பள்ளிக்கூடம் சென்று வந்த நாட்களில், ஜூயபுரம் அருகே உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி இருந்து, அங்கிருந்து தினமும் பள்ளிக்கூடம் சென்று
வந்தார். 

அப்போது, எதிர் வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவரான 38 வயதான விஜயகுமார் என்பவரின் மகளுடன், அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நட்புக்கொண்டு வந்திருக்கிறார். 

இதனையடுத்து, சிறுமிகள் இருவரும் தோழிகளாக மாறிய நிலையில், இருவரும் சேர்ந்து தினமும் பள்ளிக்குச் சென்று வந்தனர்.

அத்துடன், பள்ளிக்கூடம் சென்று வந்த பிறகும், மற்ற விடுமுறை நாட்களிலும் சித்தி வீட்டில் தங்கி படித்து வந்த சிறுமி, தனது தோழியின் வீடான ஆட்டோ டிரைவர் 38 வயதான விஜயகுமார் வீட்டிற்கு சென்று, தனது தோழியுடன் நீண்ட நேரம் விளையாடுவதும், சேர்ந்து படிப்பதுமாக இருந்து வந்திருக்கிறார். 

அப்போது, சிறுமியிடம் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட தோழியின் தந்தையான 38 வயதான விஜயகுமார், அந்த சிறுமியிடம் எஸ்.எம்.எஸ். மூலமாக சாட்டிங் செய்து, தனது மகளுக்கே தெரியாமல் பழகி வந்திருக்கிறார். 

இந்த விசயம், ஒரு கட்டத்தில் சிறுமியின் வீட்டிற்குத் தெரிந்த நிலையில், அந்த செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு, அவரை கடுமையாகக் கண்டித்து உள்ளனர். 

மேலும், சிறுமியை அவர்கள் வீட்டிற்கு அனுப்பாமல் இருந்து வந்தனர். இதனையடுத்து, அந்த சிறுமியிடம் பேச வேண்டும் என்பதற்காக, 38 வயதான விஜயகுமார், வேறு ஒரு செல்போனை வாங்கி கொடுத்து சிறுமியிடம் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார்.

இப்படியான நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறிய 38 வயதான விஜயகுமார், மகளின் தோழியான சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

இதனால், பயந்து போன சிறுமி, அவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இதனால், கோபப்பட்ட விஜயகுமார், சிறுமியிடம் மது போதையில் தகராறு செய்திருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து குழந்தைகள் நலவாரியத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, ஆட்டோ டிரைவர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய முயன்ற நிலையில், அவர் திடீரென்று தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்யும் விதமாக, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.