சென்னை தியாகராய நகர், விஜயராகவா சாலையில்  வெள்ளநீர்  பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

stalinதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ள நீரை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மின்மோட்டர்களை கொண்டு அகற்றி வருகிறார்கள்.


பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.  இந்தநிலையில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 3 நாட்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களையும் முதல்வர்  வழங்கினார். 

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டுப்பார்த்து ஸ்டாலின் ஆய்வு செய்தார். மருத்துவ முகாம்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலவச மருத்து முகாம்களையும்  முதலமைச்சர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார். வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிலையில், இன்று கொட்டும் சென்னை மழையில், வீதி வீதியாக நடந்து சென்று வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது நாளாக ஆய்வு செய்து வருகிறார். தி.நகர் விஜயராகவா சாலையில் மழை, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார்.  மாம்பல் கால்வாய் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வட சென்னை பகுதிகளையும்  முன்னதாக எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.  கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார் .