உச்ச நீதிமன்றம் கொலீஜியம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நிதிபதிகளை நியமனம் செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில், மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றும், ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்ரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சத்திகுமார் சுகுமார குருப். மற்றும் முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராமராஜு நல்லையா, தமிழ்செல்வி ஆகியோரை, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இவர்களுக்கான நியமன உத்தரவை, ஜனாதிபதி பிறப்பிக்க வேண்டும். உத்தரவு வந்த பின், உயர் நீதிமன்ற நீதிபதிகளாக, பதவியேற்பர். உயர் நீதிமன்றத்தில், தற்போது, 54 நீதிபதிகள் உள்ளனர். புதிதாக, 10 நீதிபதிகள் பதவியேற்கும் போது, எண்ணிக்கை, 64 ஆக உயரும். உயர் நீதிமன்றத்துக்கு, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75. இதில் 22 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கு 10 மாவட்ட நீதிபதிகளின் பெயரை உயர் நீதிமன்ற கொலீஜியம் உச்ச நீதிமன்றத்துக்கு பரி்ந்துரை செய்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரையை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இவர்களை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இந்த 10 மாவட்ட நீதிபதிகளும் விரைவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் விரைவில் பிறப்பித்த உடன் நடைமுறைகள் முடிந்து இவர்கள் 10 பேரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். இந்த 10 பேரும் பதவியேற்றால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும். எஞ்சிய இடங்களுக்கு உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்பதால் வழக்கறிஞர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது