“சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்” என்று, சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலியிலும் 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 

இங்கிருந்து தென் சென்னை பகுதியான திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளுக்குத் தொடக்கத்தில் தினமும் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அதாவது, நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளை வெள்ளிக் கிழமை காலை 6 மணி முதல் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தான், “சென்னையின் முக்கிய பகுதிகளாகத் திகழும் திருவான்மியூர், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் போன்ற தென் சென்னை பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் அடுத்த 2 நாட்களான செப்டம்பர் 24, 25 ஆம் தேதிகளில் நிறுத்தம் செய்யப்படுவதாக” சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது என்றும், இங்கு நாளை வெள்ளிக் கிழமை காலை 6 மணி முதல் 25 ஆம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இந்த நேரத்தில் சென்னையின் பிராதன பகுதிகளான திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இதனால் பொது மக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம்” என்றும், அறிவுறுத்தி உள்ளது. 

“இதற்காகப் பகுதி 9 மயிலாப்பூர், மந்தைவெளி பொறியாளர் செல்போன் எண் 81449-30909, பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30913, பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியாளர் செல்போன் எண் 81449-30914, பகுதி 15 ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30915 தொடர்பு கொண்டு பொது மக்கள் பயனடையலாம்” என்றும், சென்னை குடிநீர் வாரியம் தகவல் வெளியிட்டு உள்ளது.