6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

chennai rain

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சென்னையில் இன்று காலை திடீரென பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னை புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.

மேலும் சென்னை மெரினா, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, பெரியமேடு, மெரினா, மந்தைவெளி,கோடம்பாக்கம், கிண்டி, கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் திடீரென மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.