ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்த நிலையில் சில வருடங்கள் முன் மூடப்பட்டது. அந்த ஆலையை மூட அந்த மாவட்ட மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 பேர் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அதன் பின் மக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட இந்த ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் பல மனுக்களை அளித்து வந்த நிலையில் தற்போது தங்களுக்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் ஆக்ஸிஜன் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதனிடையே, ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அவசர நிலை கருதி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்தது. இதற்கு, ஆக்சிஜன் தயாரிப்பிற்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என  மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.