வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண் ஹிஜாபை அகற்றச் சொல்லியதால் பூத் ஏஜெண்ட் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த 10-ம் தேதி முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படிதெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றியது. இதில் அதிருப்தி அடைந்த பள்ளி மாணவிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்திலும் இந்த விவகாரம்  ஆரம்பித்திருக்கிறது.  ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் மாணவிகள் தங்களுக்கு பாடமும் தேர்வும் முக்கியமில்லை ஹிஜாப் தான் முக்கியம் என்று சொல்லி பள்ளி , கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர் .

ஹிஜாப் விவகாரம் கர்நாடகா,  ஆந்திரா மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எதிரொலித்து வருகிறது.   குறிப்பாக தமிழ்நாட்டில் ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிலும் ஹிஜாப் விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிலும் ஹிஜாப் விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர் நகராட்சி 8-வது வார்டில் அல்-அமீன் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்திருக்கிறார்கள்.   அப்போது அப்பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் என்பவர் அகற்றச் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து வாக்களிப்பு சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் வாக்கு பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜனை வாக்குப்பதிவு மையத்திலிருந்து பாதுகாப்பு போலீசார் வெளியேறிய பின்னரே வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து அல் அமீன் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.