8 மாத கர்ப்பமான மாணவி ஒருவர், மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் மாணவி ஒருவர், கிண்டியில் உள்ள ஐடிஐயில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த 21 வயதான இளம் மாணவி, செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, காதலர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து பல்வேறு பகுதிகளுக்கும் ஊர் சுற்றி வந்த நிலையில், தனிமையில் அடிக்கடி ஒன்றாக சந்தித்து பேசிக்கொண்டதாகவும் கூறப்படுக்கிறது.

இந்த தனிமையான சந்திப்பின் போது, காதலர்கள் இருவரும் தங்களை மறந்து எல்லை மீறி ஒருவருக்கொருவர் நெருக்கமானதால், இந்த நெருக்கமான காதலால், அந்த 21 வயது மாணவி கர்ப்பமாகி உள்ளார்.

இப்படியாக, திருமணம் ஆகா நிலையில் மாணவியின் வயிற்றில் வளர்ந்த கருவானது தற்போது 8 மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். 

இதனால், 8 மாத கர்ப்பிணியாக இருந்த இந்த மாணவிக்கு, கீழே குதித்த அந்த சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. 

இதனைக்கண்டு கடும் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

அங்கு, மாணவி தீவிர சிகிச் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையை கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து வந்த வடபழனி போலீசார், வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 8 மாத கர்ப்பிணி மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில், மாடியிலிருந்து குதித்த வேகத்தில் அவருக்கு குழந்தை இறந்து பிறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.