விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.

இந்த தொடரில் சரவனவிக்ரமிற்கு ஜோடியாக சில நடிகைகள் வந்து சென்றனர்,கடைசியாக நடித்து வந்த வைஷாலி சமீபத்தில் கூட ஷூட்டிங்கில் இணைந்ததாக தெரிவித்திருந்தார்.ஆனால் இன்று ரசிகர்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் புதிய ஐஸ்வர்யாவாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் தீபிகா என்ட்ரி கொடுத்துள்ளார்.தீபாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,திடிரென்று வைஷாலி மாற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)