நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் VJ அஞ்சனா. தொலைக்காட்சியில் ரசிகர்களுடன் உரையாடி பாடல்களை தொகுத்து வழங்கும் பணியை சிறப்பாக செய்தவர். தொலைக்காட்சிக்கு ரெஸ்ட் அளித்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விடவில்லை. 

Anjana

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையிலிருந்து மேக மூட்டமாக இருக்க, சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 

Anjana

இந்நிலையில் பிரபல VJ அஞ்சனா இன்று பெய்த மழையைக் கொண்டாடும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அப்பதிவில், ஒஹோ மேகம் வந்ததோ ! யார் சொன்னது க்ரே கலர் இருள் நிறைந்தது என்று? இதோ கருமையான இந்த மேகங்கள் சந்தோஷத்தின் அடையாளமாக வந்துள்ளது....சிலர் மழையில் சும்மா நனைவார்கள்...ஆனால் சிலர்தான் மழையை உணர்வார்கள் என ரசனையான கேப்ஷனுடன் அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.