தன் நடிப்பினாலும் வித்தியாசமான புது முயற்சியினாலும் தமிழ் மக்களை மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களை  தன் பக்கம் வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் ரசிகர்களை தாண்டி அனைத்து மொழி பிரபலங்களினாலும் பாராட்டப்பட்டும் வருகிறார் விஜய் சேதுபதி.

கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் மிரட்டியும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மூலம் புன்னகையுடன் ஈர்த்து வந்தவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தமிழில் தற்போது  காந்தி டாக்ஸ், பிசாசு 2, வெற்றிமாறனின் விடுதலைமைக்கேல் மற்றும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019-ம் ஆண்டு ஒடிடி யில் வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலமடைந்த தொடர் ‘ஃபேமிலி மேன்’. ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்கிய இந்த தொடரில் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருந்திருந்தனர். பெரும் வரவேற்பு பெற்ற இந்த தொடரையடுத்து டீகே மற்றும் ராஜ் தங்களது அடுத்த தொடரை தொடங்கினர். அதில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்தியில் விஜய் சேதுபதி நடித்து வருவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது. இந்தியில் இந்த படம் மட்டுமல்ல கத்ரினா கைப்புடன் ‘மெர்ரி கிறிஸ்மஸ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அட்லி இயக்கத்தில் கிங் கான் ஷாருக் கான் நடித்து வரும் ஜவான் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல்வேறு இந்திய மொழி படங்களில்  ஒரு ரவுண்டு அடித்து வரும் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் அவரது ரசிகர்களை மகிழ் செய்கிறது.

இந்நிலையில்  விஜய் சேதுபதி நடித்து வந்த இந்தி தொடரான ‘ஃபர்ஸி’ தொடரின் முதல் பார்வை சர்ப்ரைஸாக வெளியானது. தொடரில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர் தோற்றத்தை அறிமுகம் செய்தது சீரிஸ் குழு. அதிரடியாய் துப்பாக்கி ஏந்தி நின்று வில்லத்தனமாக பார்க்கும் விஜய் சேதுபதியின் போஸ்டர் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

An original story about copying. #Farzi @PrimeVideoIN @shahidkapoor @VijaySethuOffl @kaykaymenon02 #raashiikhanna #amolpalekar @bhuvanarora27 @ReginaCassandra @KubbraSait @MenonSita @sumank @d2r_films pic.twitter.com/GbhemLPaJh

— Raj & DK (@rajndk) January 5, 2023

அதனுடன் ஷாகித் கபூர் முரட்டுதனமான தோற்றத்தில் இருக்க கூடிய போஸ்டரும் அதிகம் கவரப்பட்டு வருகிறது.மேலும் தொடர் அதிகாரப்பூர்வமாக வரும் பிப்ரவரி 10 ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அறிவித்துள்ளது சீரிஸ் குழு. எட்டு எபிசோடுகளைக் கொண்ட இத்தொடர் நகைச்சுவை கலந்த ஒரு கூடிய க்ரைம் – த்ரில்லராக உருவாகியுள்ளதாக தகவல் . இதனையடுத்து விஜய் சேதுபதி விரைவில் திரைக்கு வருவதையொட்டி அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.