தமிழ் திரையுலகில் எதார்த்த படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். 

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயினாக நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரவுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூலாக இருந்து வருகின்றனர் விக்கி மற்றும் நயன்தாரா. 

கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்கள். நயன்தாராவுடன் சேர்ந்து பயணம் செய்வதை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகக் கூறி Go கொரோனா Go என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட நயன்தாராவுடன் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றார். இருவரும் இறங்கி நடந்து சென்றதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். கொச்சிக்கு சென்ற காதல் ஜோடி தற்போது கோவாவுக்கு சென்றுள்ளது. கோவாவில் நயன்தாரா நீச்சல் குளம் அருகே நடந்து செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, நெஜமாவே ரொம்ப காலம் கழித்து வெகேஷனுக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஒருவேளை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரெக்கி பார்க்க சென்றுள்ளாரா என்ற ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகவுள்ளது. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.