இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கிய நாயகன், தளபதி, அஞ்சலி போன்ற படங்கள் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. கடைசியாக செக்கச் சிவந்த வானம் படத்தை இயக்கினார். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோரை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். 

manirathnam

இந்நிலையில் நடிகையும் மணிரத்னமின் மனைவியுமான சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அப்பதிவில், கடந்த 4 தசாப்தங்களாக அவர் படங்களை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இப்போது உங்களை அவர் பார்க்கும் நேரம். 

manirathnam

உங்களை பற்றிய அறிமுகத்தோடு, உங்கள் கேள்வியையும் 25 நோடிகளுக்குள் வீடியோ எடுத்து, 90946 77777 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். மணிரத்னம் அவர்கள் வீடியோக்களை பார்த்து, அந்தந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என அவர் தெரிவித்துள்ளார். நிச்சயம் திரை விரும்பிகள் அவர்களது கேள்விகளுடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.