பிரபல சீரியல் நடிகையாக தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் சமீரா ஷெரிப்.தெலுங்கு சீரியல்களில் நடித்து கவனம் பெற்ற இவர் தமிழில் விஜய் டிவியின் பகல் நிலவு தொடரின் மூலம் அறிமுகமானார்.இந்த தொடரின் முன்னணி வேடத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக மாறினார் சமீரா.

இந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சையத் அன்வரை காதலித்து 2019-ல் திருமணம் செய்து கொண்டார் சமீரா.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்கை கட்டை பறக்குது மனசு தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் சமீரா.இந்த தொடர் சில காரணங்களால் இந்த தொடர் கைவிடப்பட்டது.

இந்த தொடரை சையத்-சமீராவுடன் இணைந்து தயாரித்திருந்தார்.இதனை தவிர சில சூப்பர்ஹிட் தொடர்களையும்  இந்த ஸ்டார் ஜோடி இணைந்து தயாரித்திருந்தனர்.கர்பமாக இருப்பதை கடந்த ஏப்ரல் மாதம் ரசிகர்களிடம் அறிவித்தார் சமீரா.

தற்போது தன்னை எப்போதும் தனது கணவர் நன்றாக பார்த்துக்கொள்வதாகவும்,கொரோனா தடுப்பூசி கர்பமாக இருப்பவர்களும் போடலாம் என்றும் தான் ஊசி போட்டுக்கொண்ட வீடீயோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்