திருமணம் சீரியல் ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் !
By Aravind Selvam | Galatta | July 08, 2020 14:04 PM IST
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு காரணமான இருக்கும் முக்கிய தொடர் இது. சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.
இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம்,ஷேர்சாட் என்று ரசிகர் பக்கங்கள்,வீடியோ மற்றும் போட்டோ எடிட்கள் என்று ரசிகர்கள் இருவரையும் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
இதனை அடுத்து இன்று சில சீரியல் ஷூட்டிங்குகள் தொடங்கியுள்ளன கலர்ஸ் தமிழின் முதன்மையான சீரியல்களில் ஒன்றான திருமணம் சீரியலின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது என்று ஹீரோ,ஹீரோயின் இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.ஹீரோயின் ஸ்ரேயா பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஜனனியாக என்று பதிவிட்டுள்ளார்.ஹீரோ சித்தார்த் விரைவில் சந்தோஷ் ஜனனி உங்களை சந்திப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.இதனையடுத்து திருமணம் சீரியல் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.
WOW: Thalapathy Vijay is the only Tamil actor to achieve this massive record!
08/07/2020 02:37 PM
Baahubali and Saaho star Prabhas' next biggie: Much-awaited announcement made!!
08/07/2020 11:00 AM