விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரில் நடந்த பெரிய மாற்றம் !
By Aravind Selvam | Galatta | October 02, 2021 17:38 PM IST
தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பது விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்று எப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.இந்த தொலைக்காட்சியில் பணியாற்றிய பலரும் இப்போது வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக விஜய் டிவியின் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று அசத்தி வருகின்றது.பல சூப்பர்ஹிட் தொடர்களின் மூலம் பல நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளனர்.
விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்று தேன்மொழி.விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான ஜாக்குலின் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.சித்தார்த் இந்த தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
வரும் வாரத்தில் இருந்து பிக்பாஸ் தொடர் தொடங்குவதால் இந்த தொடர் நிறைவடைகிறது என்ற தகவல் பரவி வந்தது,ஆனால் தற்போது இந்த தொடர் நிறைவடையவில்லை என்றும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அவசரமாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொடர் நீடிக்கப்படுவதால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.