சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ருதி ராஜ்.இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் கிடைத்தனர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதரித்தார் ஸ்ருதி.

ஆபீஸ் சீரியலின் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடித்தார்.இந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து மீண்டும் சன் டிவிக்கு வந்தார் ஸ்ருதி ராஜ்.அபூர்வ ராகங்கள் என்ற தொடரில் நடித்து வந்தார் ஸ்ருதி.இந்த தொடர் 2018-ல் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து 2018 முதல் 2020 வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியலில் நடித்து வந்தார்..இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.விரைவில் ஒரு புதிய தொடருடன் என்ட்ரி கொடுப்பதாக ஸ்ருதி ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள தாலாட்டு புதிய தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த தொடரின் நாயகனாக தெய்வமகள் கிருஷ்ணா நடித்துள்ளார்.இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியானது.தற்போது இந்த தொடர் வரும் ஏப்ரல் 26 முதல் மதியம் 2.30 மணிக்கு
ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.