தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் இவர் நடித்த ராட்சசி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனையடுத்து குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் ஜாக்பாட் படத்தில் நடித்து வருகிறார்.

விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் நாளை வெளியாகிறது.இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது பேட்டியளித்த ஆனந்தராஜ் ஜாக்பாட் இசை வெளியீட்டில் என் கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தை தெரிவித்தார்.

ஜாக்பாட் இசை வெளியீட்டு தினத்தன்று தனக்கு பிகில் படத்தின் ஷூட்டிங் இருந்ததாகவும் ,ஷூட்டிங்கை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகி விட்டதாகவும் தெரிவித்தார்.தங்கள் ஷூட்டிங்கில் இருந்து தாமதமாக சென்று கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக விஜய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.