தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மற்றும் செவன் Screen ஸ்டுடியோவை சேர்ந்த லலித் குமார் இந்த படத்தில் லைன் Producer ஆக பணியாற்றுகிறார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் மூன்றாம் வாரம் தொடங்கவுள்ளது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.இதனை பற்றி நமது நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்த போது இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்று தெரிவித்தனர்.

தளபதி விஜய் தற்போது பிஸியாக பிகில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார் இதனை முடித்தபின்னரே இந்த படத்திற்கு தயாராவார் என்று தெரிகிறது.அதேபோல் லோகேஷ் கனகராஜ் கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேளைகளில் பிஸியாக உள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.