கோலிவுட்டில் சிறந்த ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களில் ஒருவர் சிபிராஜ். கடைசியாக அன்பரசன் இயக்கத்தில் வால்டர் படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் கபடதாரி. நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் K கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் சூர்யா இந்த போஸ்டரை வெளியிடுகிறார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சிபிராஜ் ரசிகர்கள். சிபிராஜின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளம் முழுவதும் காமன் DP வெளியிட்டு அசத்தி வருகின்றனர் இணையவாசிகள். இந்நிலையில் இச்செய்தி இனிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. 

கபடதாரி படத்திற்கு ஜான் மகேந்திரன் மற்றும் தனஞ்ஜெயன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். கு.கார்த்திக் மற்றும் அருண் பாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளனர். சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. சத்யா படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைந்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர். அரசு உத்தரவு படி சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் படங்களின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து கபடதாரி படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்தது. நாசர், ஜெயபிரகாஷ் போன்ற நடிகர்கள் டப்பிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற செய்தி வெளியானது. இதனால் விரைவில் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசமதி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரவீன் KL எடிட்டிங் செய்கிறார். 

கபடதாரி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் கடந்த வாரம் நிறைவடைந்தது. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் பூஜையுடன் நிறைவு செய்தனர். நவம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கபடதாரி படக்குழுவினர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையத்தை அசத்தி வருகிறது.