ஹீரோ முதல் காட்சிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் உருக்கமான பேச்சு !
By Aravind Selvam | Galatta | December 20, 2019 13:04 PM IST
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் காட்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் படம் பார்த்து ரசித்தார்.இந்த காட்சி முடிந்தபிறகு பேசிய சிவகார்த்திகேயன் இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி தருவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.