சினிமா என்பது நடிகர்களை தாண்டி பல திரைக்கு பின் உழைக்கும் பல கலைஞர்களை உள்ளடக்கியது.அதில் முக்கியமான கலைஞர்கள் தான் பாடகர்கள்.தங்கள் இனிமையான குரல்கள் மூலம் பல ரசிகர்களை கட்டிப்போட்டு பல பாடகர்கள் பிரபலமாக இருந்து வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் டூ டூ டூ பாடலை பாடி ட்ரெண்டிங்கில் இருப்பவர் சஞ்சனா கல்மாஞ்சே.கிடாரி படத்தில் சில பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக மாறியவர் சஞ்சனா கல்மாஞ்சே.

தொடர்ந்து பல முன்னணி தமிழ் படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ள இவர் ஹிட் சிங்கர் லிஸ்டில் இணைந்தார்.சமீபத்தில் அனிருத் இசையில் இவர் பாடிய டூ டூ டூ பாடல் செம ட்ரெண்டிங்கில் சென்று வர   செம உற்சாகத்தில் உள்ளார் சஞ்சனா கல்மாஞ்சே.

அடுத்ததாக சில முக்கிய படங்களில் பாடல்கள் பாடி அசத்தியுள்ளார் சஞ்சனா கல்மாஞ்சே.சஞ்சனாவிற்கும் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சாகர் மஹதி என்பவருடன் நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.