செப்டம்பர் 18-ம் தேதி என்பத்தி எட்டாம் நாளான இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், டாஸ்கின் போது கவின் மற்றும் சாண்டி இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. சாண்டி தெரியாமல் செய்த தவறுக்காக கவின் குரல் எழுப்புவது போல் தெரிகிறது. டாஸ்க்கில் இதுபோன்ற தவறுகள் நடப்பது இயல்பு தான் என்று எடுத்துரைக்கிறார் தர்ஷன்.

biggboss

sherin

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. பிக் பாஸ் 3-க்கான இறுதிகட்ட டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

sandy

kavin

ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். சமீபத்தில் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டைட்டிலை யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.