செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சரண்யா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அணைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.இவர் ஹீரோயினாக நடித்து வரும் ஆயுத எழுத்து தொடரின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் அப்டேட்களை பதிவிடுவார் சரண்யா.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்று வருகிறது.

இவர் ராகுல் என்பவரை காதலித்து வருகிறார்.சமீபத்தில் முடிந்த இவரது பிறந்தநாளை கூட இவர் வெகு சிறப்பாக கொண்டாடினார்.தற்போது தனது காதலர் ராகுலுடன் இணைந்து தண்ணீருக்கு அடியில் கபுல் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.இந்த போட்டோஷூட் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.எப்படி இந்த போட்டோஷூட்டை நடத்தினீர்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த போட்டோஷூட் உருவான விதத்தையும் சரண்யா வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகத்திணை இலக்கணம் மறந்திடுங்கள். காதல் கொண்டோர்க்கு நெய்தலிலும் உரிப்பொருள் கூடலே ❤ This was a first in the country and we couldn’t have been happier to be a part of this ! All the immense effort from the entire team of @zerogravityphotography , @page3knk , The Divers and technicians made this feasible. Our absence of wetsuits was a major challenge along with my fear for Sharks and Sting Rays ,but with Him @rahul__sudharshan by my side this was deemed possible. It was nothing short of Magical , beyond this being India’s first and everything else , Love beats it all ❤

A post shared by SHARANYA TURADI (@sharanyaturadi_official) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Discovering Love In a Whole New Dimension With My Constant @sharanyaturadi_official ❤️ This Still Feels Like a Dream ! 💫 The Effort , Training , Fear of Marine Life and The Super Cold Water ! 🥶🥶😰 Though the Wetsuits are Mandatory ,We Pulled This Off Without Them As They Wouldn’t Fit Inside Our Outfits, We Froze Through For Hours And It Was Totally Worth it ! A Big Shout Out and Thank You for @zerogravityphotography For Making This A First In India Creation Possible. ❤️ This Was Shot in Chennai and We’re The First in The Indian Subcontinent Shooting on Indian Soil On These Parameters. 😁 @sharanyaturadi_official in @diadembridal @rahul__sudharshan in @studio24_bespoke Make Up - @page3knk PS- We Had To Train With Expert Divers Prior To This ! This Wouldn’t be Possible If Not For Them. 🤗

A post shared by Rahul Sudharshan (@rahul__sudharshan) on