நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் தனது பயணத்தை தொடங்கி தற்போது பிரபல சீரியல் நடிகையாக சின்னத்திரையை கலக்கி வருபவர் ஷாமிலி நாயர்.தமிழில் சில படங்களில் நடித்து தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார் ஷாமிலி.பிறகு தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள நடிப்பு கற்றுக்கொண்டு வந்தார் வந்தார் ஷாமிலி.

சில வருடங்களில் இவருக்கு சீரியல் வாய்ப்பு வர , அதில் தனது திறமையை நிரூபிக்க களமிறங்கினார் ஷாமிலி.சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் தொடரான கேளடி கண்மணி தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் தொடரில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகையாக மாறினார் ஷாமிலி நாயர்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் 2 வருட ஒளிபரப்புக்கு பின் நிறைவடைந்தது.

கொரோனா,படிப்பு என சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக மீடியாவிற்கு பிரேக் விட்ட இவர்,தற்போது பிட்டாக ட்ரான்ஸ்பார்ம் ஆகி தனது இரண்டாவது இன்னிங்ஸை வெகு விரைவில் தொடங்கவுள்ளார்.விரைவில் இவரை ஒரு ப்ரொஜெக்டில் காணலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.தனது ட்ரான்ஸ்பர்மேஷன் குறித்த சில புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் அதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்.