செம்பருத்தி தொடரில் நடந்த பெரிய மாற்றம் !
By Aravind Selvam | Galatta | February 26, 2021 20:09 PM IST
ஜீ தமிழில் ஒளிபரப்பி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று செம்பருத்தி.ஜீ தமிழில் TRP-யை அள்ளி வந்த முக்கிய தொடர்களில் ஒன்றாக செம்பருத்தி உள்ளது.இந்த தொடரில் ஹீரோ ஹீரோயினாக கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானா நடித்து வந்தனர்.ப்ரியா ராமன் மற்றொரு முக்கிய வேடமான அகிலாண்டேஸ்வரி வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.
இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான ஆதி-பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனாவுக்கு பிறகு இந்த தொடரில் சில முக்கிய மாற்றங்கள் நடந்தன முதலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஜனனி அசோக் குமார் திடிரென்று மாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த தொடரின் நாயகன் கார்த்திக் தொடரில் இருந்து விலகினார்.இப்படி தொடரில் சில பெரிய மாற்றங்கள் நடக்க ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.புதிய நடிகர்கள் வந்தாலும் தொடரின் பரபரப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.
இந்த தொடரில் தற்போது புது என்ட்ரி ஆக பிரபல சீரியல் நடிகை துர்கா நடிக்கிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.தற்போது இவர் முக்கிய கதாபாத்திரமான உமா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Mumbai Police books Slumdog Millionaire actor Madhur Mittal for sexual assault
26/02/2021 10:06 PM
BREAKING: Nalan Kumarasamy reveals his next film for the FIRST TIME! Check Out!
26/02/2021 07:49 PM