ஆதி-பார்வதியின் புதிய தொடக்கம் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | August 24, 2020 17:22 PM IST
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.
கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ஷபானா.மேலும் சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.
புதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.புதிய எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.ஜீ தமிழில் வாரத்தின் ஏழு நாட்களும் தற்போது சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் பிரபல காமெடி நடிகர் மனோபாலா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளனர்.வீட்டை விட்டு வெளியேறிய ஆதி-பார்வதி இருவரும் புதிய வீட்டில் குடிபுகுந்தனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
EXCLUSIVE: This superhit director confirms his next with Dhanush!
24/08/2020 04:27 PM
Popular Tamil film actor gets hitched during lockdown - wishes pour in!
24/08/2020 03:33 PM
Is Thalapathy 65 the sequel of Thuppakki? Director A.R.Murugadoss reveals!
24/08/2020 01:53 PM