தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

தற்போது வெளியான ப்ரோமோவில், தனது தவறை உணர்ந்து சேரனின் காலில் விழுந்தார் சரவணன். தனது நிஜ வாழ்க்கையில் கமல் ஹாசன் சந்தித்த நிகழ்வை சரவணன் முன் எடுத்துரைத்தார்.