விஜய் டிவியின் காமெடியனாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவராக அவதரித்தவர் சந்தானம்.முன்னணி காமெடியனாக உயர்ந்த பின்னர் கதாநாயகனாகவும் உருவெடுத்தார் சந்தானம்.ஹீரோவாக இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தன.

சமீபத்தில் இவர் நடித்த சபாபதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்களில் அடுத்து நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த ஏஜென்ட் சாய்ஸ்ரீநிவாஸா படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சந்தானம்.

தான் ஹீரோவாக நடிக்கும் 15ஆவது படத்தினை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்குவார் என்றும் Fortune சினிமாஸ் இந்த படத்தினை தயாரிப்பார்கள் என்றும் சந்தானம் அறிவித்துள்ளார்.இந்த படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.