விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வந்தனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து இந்த தொடர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.ஜனனி அசோக் குமார்,காயத்ரி யுவராஜ்,ராஜுமோஹன்,ப்ரேமி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக 300 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் காமெடி வேடத்தில் நடித்து அசத்தி வந்த ராஜு பிக்பாஸ் சென்றுள்ளார் , இந்நிலையில் காமெடி ட்ராக்கிற்கு உதவியாக இருக்கும்படி முதல் சீசனில் அசத்திய சிவகாந்த் இந்த தொடரில் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் இன்று முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.