பா. ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த ருசிகர தகவல்
By Sakthi Priyan | Galatta | August 30, 2019 18:00 PM IST
அட்டகத்தி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா என வெற்றி படங்களை எடுத்து அசத்தினார். தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் வாழ்கையை படமாக எடுத்து வருகிறார்.
சிறந்த இயக்குனரான ரஞ்சித், சீரான தயாரிப்பாளரும் கூட. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களை நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் எடுத்துள்ளார். தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்கவுள்ளார். குழந்தைகள் தொடர்புடைய படமாக இருக்கக்கூடும் என்ற தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.