கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இயல்பாக ஊரை சுற்றி பல மாதங்கள் ஆன நிலையில் உள்ளனர் மக்கள்.

திரைப்பிரபலங்களுக்கும் இதே கதி தான். படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். இப்படியிருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னரே அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே அமிதாப்பச்சன், சிரஞ்சீவி உள்ளிட்டோருடன் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த ரஜினிகாந்த், பிரதமர் சொன்னபடி வீட்டின் வெளியே வந்து விளக்கேற்றியது உள்ளிட்ட ஒரு சிலவற்றிற்காக வெளியில் தலை காட்டினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தப்படி லம்போர்கினி காரை ஓட்டிச் சென்றார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

கார் ஓட்டியப்படி நம் சூப்பர்ஸ்டார் எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்த நிலையில், இளைய மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் வேத் ஆகியோருடன் இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் தனது இளையமகள் சவுந்தர்யா வீட்டிற்குதான் சென்றுள்ளார் என தெரியவந்தது. கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் மகள், மருமகன் மற்றும் பேரனுடன் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது வீட்டின் பண்ணை தோட்டத்தில் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

லாக்டவுனில் இருந்தாலும், ஃபிட்டாக இருக்கவேண்டுமென்று வாக்கிங் செய்யும் நம் சூப்பர்ஸ்டாரை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். அண்ணாத்த படத்திற்கு அசத்தலாக தயாராகிறார் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். 

படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது. லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.