புனேவில் வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரிடம், “பக்கத்துல வந்தா டிரஸ்ஸ கழட்டிடுவேன்” என்று பெண் ஒருவர் மிரட்டும் சம்பவம் வைரலாகி வருகிறது.

woman threatens

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராம் நகர்ப் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது, அதிகாலை 5.30 மணி அளவில், பெண் ஒருவர் அதிவேகமாக வந்து மோதியுள்ளார். இதில், ஒருவருடைய கார் மட்டும் முற்றிலுமாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, காரின் உரிமையாளர் ஹின்ஜிவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து, சம்பவத்தை உறுதி செய்து, காரை மோதியது யார் என்றும் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பெண்ணை விசாரிப்பதற்காக, அந்த பெண்ணின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண் ஆபாச வார்த்தைகளால் போலீசாரைத் விட்டுவிட்டு, “பக்கத்துல வந்தா டிரஸ்ஸ கழட்டிடுவேன்..” என்று கூறி, போலீசாரையே அதிர வைத்துள்ளார்.

மேலும், தனது ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு, பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளிப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, தன்னுடைய 2 கார்கள் வெளியே நிற்பதாகவும், வேண்டும் என்றால் பழிக்குப் பழியாக தன் காரை சேதப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இதனால், அதிர்ந்துபோன போலீசார் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

woman threatens

அப்போது அங்கு வந்த பெண்ணின் கணவர், நஷ்டத்திற்குப் பணம் தருவதாக போலீசாரிடம் சமாதானம் பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அந்த பெண் போலீசாரிடம் ஆபாசமாகப் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராகி வருகின்றன.