எப்போதும் புது ட்ரெண்டை உருவாக்கும் STR, இந்த லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் நடித்து இணையதள ரசிகர்களுக்கு விருந்தளித்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் இந்த நிலை மாறி இயல்பு நிலை திரும்பியவுடன் முதலில் STR கலந்துகொள்ளவிருக்கும் படப்பிடிப்பு மாநாடு. நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே போகிறது. 

மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். 

மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர். 

தற்போது இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதில், அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்...தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் STR ரசிகர்கள். 

மாநாடு படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் SJ சூர்யா அவர்களின் பிறந்தநாள் என்பதால், அவரை வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. தனக்கென தனிப் பாதை போட்டுக்கொண்ட படைப்பாளி... பல கோடி இதயங்களைக் கொள்ளையடித்த திரைக்கதை வித்தகன், தன்னை அப்டேட் செய்துகொள்ளும் சமகாலத் திறமையாளன், பண்பாளன் சகோதரர் SJ சூர்யாவுக்கு என் சார்பாகவும் மாநாடு படக்குழு சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். மாநாடு படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் SJ சூர்யா. STR உடன் இவர் நடிக்கும் காட்சிகள் திரையரங்கை அதிர வைக்கும் என்று கூறினால் மிகையாகாது.