தமிழ் சினிமாவில்  கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக  அறிமுகமாகி தொடர்ந்து கிங், கொக்கி, லீ , லாடம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன். அடுத்ததாக இவர் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து கும்கி, கயல், தொடரி, காடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்கிறார் பிரபுசாலமன்.

தற்போது இயக்குனர் பிரபுசாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படமான டேய் தகப்பா எனும் புதிய படத்தின் மூலம் இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

பல குறும்படங்களை இயக்கி விருதுகள் பெற்ற அறிமுக இயக்குனர் கௌஷிக் ஸ்ரீ புஹர் இயக்கும் இந்த டேய் தகப்பா புதிய திரைப்படத்தில் நடிகை ஆராத்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பு, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஜான் ராபின்ஸ் இசையமைக்கும் டேய் தகப்பா படத்திற்கு S.J.சுபாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் நடன இயக்கம் செய்கிறார். டேய் தகப்பா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.