தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru.இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது.இதனை அடுத்து தனது 36ஆவது படத்தில் மஹரிஷி பட இயக்குனர் வம்சியுடன் இணைகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sarkaru Vaari Paata என்று இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.இந்த படத்தின் ப்ரீலுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து படக்குழுவினர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நிவேதா தாமஸ் பகிர்ந்துகொண்டார்.விஜய்-மோகன்லாலுடன் ஜில்லா,கமலுடன் பாபநாசம்,சமீபத்தில் வெளியான சூப்பர்ஸ்டாரின் தர்பார் என்று தமிழில் பெரிய நடிகர்களுடன் நடித்து விட்டடார் நிவேதா தாமஸ்.குறிப்பாக தர்பார் படத்தில் இவரது வள்ளி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.ரஜினியுடன் இவர் நடித்த காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து பவன் கல்யாணின் வக்கீல் சாப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.மேலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா,தற்போது மகேஷ் பாபு படம் என்று தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.