சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து ஷூட்டிங்குகள் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் ஹீரோயின்கள் மாற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இதனை பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரக்ஷா உறுதி செய்தார்.இந்த தொடரில் நட்சத்திரங்களை ஒன்றுதிரட்டமுடியாததால் இந்த தொடரை அப்படியே முடித்துக்கொண்டு  ,புதிய கதை கொண்டு அடுத்த சீசன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து யாரும் தன்னிடம் எந்த ஒரு அறிவிப்பும் அளிக்காதது தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார்.ராஷ்மியும் இந்த புதிய தொடரில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக டபிள் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்தது.இந்த தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் முதல் சீசனில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த சசிந்தருக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது.திருமண நிகழ்ச்சியில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

View this post on Instagram

அன்பிலே உன் அன்பிலே அழகே நானும் வீழ்ந்தேனே.. உயிரிலும் என் உடலிலும் உதிர் ஊற்றாய் உனையும் ஏற்றேனே.. உன் உயிரினை என் இதயத்தில் இழைக்கவே நானும் சுமந்திடுவேன்..! என் இதழ்களை உன் இதழ்களில் இனிக்கவே நானும் பதித்திடுவேன்..! இனி ஒன்றாய் செல்வோமே உயிரே உயிரே.. இன்று அன்பால் இணைந்தோம் அழகே அழகே.. இனி ஒன்றாய் செல்வோமே உயிரே உயிரே.. இன்று அன்பால் இணைந்தோம் அழகே அழகே! #SA❤️GA

A post shared by Sasindhar Pushpalingam (@sasindhar.p) on