இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த இன்று நேற்று நாளை,இமைக்கா நொடிகள்,கதகளி என்று பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.சுந்தர் சி இந்த படத்தை தயாரிக்க.இந்த படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மீகா.இந்த படத்திலேயே பல இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்து கனவுக்கன்னியாக உருவெடுத்தார்.இதனை தொடர்ந்து இவர் நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ஆத்மீகாவும் தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்வது,ஒர்க்கவுட் மற்றும் நடன வீடியோக்களை பகிர்வது என்று தனது நேரத்தை செலவிட்டு வந்தார்.தற்போது தனது புதிய ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை ஜோஷ் என்ற புதிய செயலியில் பதிவிட்டுள்ளார் ஆத்மீகா.இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.