பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இன்று வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

dinesh

இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார். 

mariselvaraj

mariselvaraj

டென்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.